மத்திய பிரதேசத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த அகழ்வாராய்ச்சிக்கு கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் ரூ.5.9 கோடி அபராதம் விதித்துள்ளனர்.
மத்தியபிரதேசம் மாநிலம் ராவு சட்டமன்ற தொகுதியில் அனில் பட்வரியின் மகன் சேதன் பட்வாரி மற்றும் முகேஷ் பட்வாரியின் மகன் குணால் பட்வாரி ஆகியோர் முன்னாள் அமைச்சர் ஜீது பட்வாரிக்கு உறவினராக இருந்ததால் அனுமதியின்றி சுரங்கத்தை நடத்தி வந்துள்ளனர். அங்கு முரம் என்ற கனிமத்தை சட்ட விரோதமாக எடுத்து வந்துள்ளனர். தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக சென்றுள்ளனர். அவர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இது குறித்து தேஜாஜி நகர் காவல் நிலையத்தில் ஜூன் மாதம் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் குணால் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மீண்டும் வருவாய்த்துறை சுரங்கத்தில் சோதனை நடத்தினார். இதில், எண் பலகை இல்லாமல் ஜேசிபி வாகனங்கள் சுரங்கப் பணிகளில் இருந்ததை பார்த்துள்ளனர். இந்த சட்டவிரோத அகழ்வாராய்ச்சியை சேதன் பட்வாரி மற்றும் குணால் பட்வாரி ஆகியோர் அனுமதியின்றி செய்ததாக போக்லானின் ஓட்டுநர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில், மாநில அரசு இந்தூரில் இருந்து கனிம வளத்துறை அதிகாரி பிரதீப் கண்ணாவை நீக்கியதுடன், தேஜாஜி நகர் காவல் நிலைய பொறுப்பாளரும் இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் பின்னர், லோகாயுக்தா செப்டம்பர் 1 ஆம் தேதி கனிம அதிகாரி பிரதீப் கண்ணாவின் இருப்பிடங்களையும் சோதனை செய்துள்ளனர். சுரங்கம் நடத்திய இருவருக்கு 5.9 கோடி அபராதம் விதித்துள்ளனர்.